Thursday, December 23, 2010

"இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு" - இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் (தமிழில்) தோழர். கே. லெட்சுமணன்

"இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு" என்ற நூல் முதலில் கம்யூனிசத் தலைவர் தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்களால் மலையாளத்தில் எழுதப்பட்டு 1977ல் நான்கு தொகுதிகளாக வெளியிடப்பட்டது. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றினை, போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்கு கொண்ட அனுபவத்துடன் முழுமையாக ஆய்வு செய்து எழுதியுள்ளார். வரலாற்று மார்க்கிய கண்ணோட்டத்தோடு எழுதியுள்ள நூலை நமது காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர்
தோழர். கே. லெட்சுமணன் தமிழில் மொழிபெயர்த்து எழுதியுள்ளார். "காந்தியின் இறுதி 200 நாட்கள்" என்ற நூலின் சிறந்த மொழியாக்கத்திற்காக 2009ஆம் ஆண்டு "நல்லி திசை எட்டு" விருதினைப் பெற்றவர். உலகப் பிரச்சனை உள்நாட்டு பிரச்சனை என பல நூல்களை தோழர் எழுதியுள்ளார். அந்தவகையில் இந்த மொழியாக்க நூல் அனைவரும் படித்தும் பயன்பெறும் வகையில் எளிய தமிழில் எழுதியுள்ளார். நூலின் விலை ரூ. 500/-

No comments:

Post a Comment