Sunday, December 26, 2010

உடுமலையிலும் தீண்டாமைச் சுவர்!

உடுமலை அருகே கே.ஜி. புதூர் ஜே.ஜே.நகரில் தாழ்த் தப்பட்ட மக்கள் குடியிருப் பிலிருந்து செல்லும் நடை பாதையைத் தடுத்து தீண் டாமைச் சுவர் எழுப்பப்பட் டுள்ளது.

இந்த சுவரை நேரில் பார் வையிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் உடனடியாக இதை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வரும் ஜே.ஜே.நக ரில் உள்ள நடைபாதை யைத் தடுத்து சுமார் 300 மீட்டர் நீளத்துக்கு 5 அடி உயரத்தில் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்க ளுக்கு வழித்தடம் மறைக் கப்பட்டுவிட்டது.

இது தொடர்பாக தக வல் அறிந்து மார்க்சிஸ்ட் கட்சியின் உடுமலை கமிட் டிச் செயலாளர் சி.சுப்பிர மணியம், மடத்துக்குளம் கமிட்டிச் செயலாளர் வெ. ரங்கநாதன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.கிருஷ் ணசாமி, என்.சசிகலா மற் றும் ஒன்றியக் கமிட்டி உறுப்பினர்கள் ஜெகதீசன், எச்.சுப்பிரமணியம், ஆனந்த குமார், திருமலைசாமி, சுதா சுப்பிரமணியம், ரவி மற்றும் கிளைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் சம்பந்தப் பட்ட இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அப்பகுதி மக்களிடம் விசா ரித்தபோது, நிலவிற்பனை செய்வோர் நிலத்தின் மதிப் பை அதிகரித்துக் காட்டும் நோக்கத்தில் தலித் மக்கள் குடியிருப்பை மறித்து தடுப் புச் சுவர் அமைத்துள்ளதாக குற்றஞ்சாட்டினர்.

தீண்டாமை நோக்கத் தோடு எழுப்பப்பட்ட இந்த சுவரை உடனடியாக அகற்றி, இந்தப் பகுதி மக்களுக்கு பாதை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் முறையிடப் போவதாகவும் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தெரி வித்தனர்.

No comments:

Post a Comment