Tuesday, December 14, 2010

ஊழலும் உலகமயமும் -கி.இலக்குவன்

சர்வதேச நிதியத்தில் (ஐஎம் எப்) பொருளாதார வல்லுநராகப் பணியாற்றிய தேவ்கர் என்பவர் தலைமையிலான குழு ஒன்று, சர்வ தேச அளவில் நிகழும் நிதித்துறை முறைகேடுகளை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி விடு தலை பெற்ற இந்தியாவில் 1948 முதல் 2008 வரையிலான காலத் தில் 21300 கோடி டாலர் அளவுக்கு பணம் (ரூபாய் மதிப்பில் 958500 கோடி இந்தியாவிலிருந்து வரி செலுத்தப்படாமல் கடத்தப்பட்டு வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப் பட்டுள்ளது. இத்தொகையில் 68 சதம், அதாவது சுமார் ரூ.6,20,000 கோடி, 1991ம் ஆண்டுக்குப்பின் வெளியேறியுள்ளது. அதாவது 1991ம் ஆண்டில் நரசிம்மராவ் அமைச்சர வையில் நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங், உலகமயக்கொள் கைகளை அதிரடியாக இந்தியா வில் புகுத்திய பிறகே இது நிகழ்ந் துள்ளது. ஆக, 60 ஆண்டுகளில் கடத்தப்பட்ட பணத்தில் 3ல் 2பங்கு 20 ஆண்டுகளில் உலகமயக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட போது வெளியேற்றப்பட்டுள்ளது.

மற்றொரு புள்ளி விபரமும் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அதாவது 1991க்கு முன்பு வெளிநாடு களுக்குக் சராசரியாக கடத்தப்பட்ட பணம் சதவீத அடிப்படையில் 9.1 என்றால் உலகமயக் கொள்கைகள் அமல்படுத்தப்படத் தொடங்கிய பிறகு அது 16.4 சதவீதமாக அதி கரித்துள்ளது. 2002 முதல் 2006 வரையிலான நான்கு ஆண்டு களில் அதாவது பாஜக மற்றும் ஐக் கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற காலத்தில் ஆண் டொன்றுக்கு சராசரியாக 72000 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் சுருட்டப் பட்ட பணம் 14 வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளதாக அண்மை யில் வெளியாகியுள்ள செய்தியும் இதற்குப் பொருத்தமானதாக உள்ளது .

முன்னாள் திட்டக்குழு உறுப் பினரும் ஓய்வு பெற்ற அரசு அதி காரியுமான எஸ்.பி சுக்லா கூறு கிறார்- நான் நேரடியாக கண்ணுற்ற நிகழ்வுகளின் அடிப்படையில் பார்த்தால் இதில் வியப்படைய எது வுமில்லை .தாராளமயக்கொள்கை கள் அமல்படுத்துதல் துவங்கப் பட்ட பிறகு ஊழல், பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்ததற்குக் கார ணம் - சந்தையே அரசாங்கத்துக் குள் நுழைந்ததனால் தான். அர சாங்கக் கொள்கைகளையும் அரசு நிர்ணயிக்க வேண்டிய விலை களையும் தொழில் நிறுவனங்களே தீர்மானிக்கும் நிலைக்கு உயர்ந்து விட்டன. அதிகாரிகள் மற்றும் அர சியல்வாதிகளுடன் கலந்துரையாடு வது மற்றும் அரசு நடவடிக்கை களில் தொழில் நிறுவனங்கள் ஈடு படுகின்றன என்பது மட்டுமல்ல. அவை அரசியல் கட்சிகள் மற்றும் ஒட்டுமொத்த ஆட்சி அமைப்பு முறைக் குள்ளேயே நுழைந்துவிடுகின்றன.

அமைப்பு முறைக்குள்ளேயே அவை தலையிடுவதற்கு பாஜக ஆட்சிக்கால அனுபவம் ஒன்றை சுக்லா உதாரணமாகக் குறிப்பிட்டுள் ளார். பாஜக ஆட்சிக்காலத்தில் அலைபேசி சேவையை நடத்து வதற்கான அனுமதியை அளிப் பதற்கு ஏலமுறைதான் முதலில் பின்பற்றப்பட்டது. பல பெரும் தொழில் நிறுவனங்களும் ஏலத்தில் பங்கேற்று அனுமதியைப் பெற்றிருந் தன. ஆனால் அந்த ஏலத் தொகைக்கு லாபம் ஈட்ட முடியாது என்பதை அவை உணர்ந்த பிறகு மீண்டும் அரசாங்கத்துடன் பேசி லைசென்ஸ் முறைக்கு மாறுவதற்கு அரசாங்கத்தை அவை இணங்க வைத்து விட்டன.அதனால் ஏலத் தொகையை விட குறைந்த விலைக்கு அலைபேசி சேவையைத் தொடர அந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அரசாங்கம் என்ன செய்திருக்க வேண்டும் ? ஏலத் தொகையைக் கட்ட முடியாத நிறு வனங்களுக்கு அபராதம் விதித்து விட்டு அவைகளின் உரிமங்களை ரத்து செய்திருக்க வேண்டும். ஏலத்தில் பங்கேற்ற பிற திறமை யான நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருக்கவேண்டும் அல்லது மறு ஏலம் நடத்தியிருக்க வேண் டும் . ஆனால் ஏலநிபந்தனைகளை நிறைவேற்றாத தொழில் நிறுவனங் களே குறைந்த கட்டணத்தில் அலை பேசிப்பணியை நடத்த அனுமதிக்கப்பட்டன. இந்த முறை கேடான முன்மாதிரியைத்தான் நானும் கடைப்பிடித்தேன். குற்றம் எதனையும் இழைக்கவில்லை என்ற பல்லவியை கீறல் விழுந்த ஒலி நாடாவைப்போல ஆ.ராசா மீண்டும் மீண்டும் பாடிவந்தார். கரு ணாநிதியும் அதையே வலியுறுத்தி வந்தார்.

பொருளாதார தாராளமய மாக்க லுக்கு ஆதரவாக லாவணிபாடிவந்த தொழில் நிறுவனங்கள் உலகமய தாராளமயக் கொள்கைகள் தான் லஞ்ச லாவண்ய லைசென்ஸ் பர்மிட் ஆட்சியிலிருந்து இந்தியா வை விடுத்து விட்டதாக வித்தாரம் பேசிவந்தன. ஆனால் கூர்ந்து கவ னித்தால் தாராளமய யுகத்தில் ஊழ லுக்கான பாதைகள்தான் மாறியுள் ளன என்றும் அதன் பிரம்மாண்டத் தையும் அது எட்டும் தொலைவை யும்தான் அதிகரித்துள்ளன என் கிறார் சுக்லா. ஸ்பெக்ட்ரம் ஊழலின் பிரம்மாண்டம் சுக்லாவின் கூற்றை மெய்ப்பிக்கிறது அல்லவா? பர்மிட் லைசென்ஸ் ஆட்சியின் போது லஞ்ச ஊழல்கள் திரை மறைவில் நடைபெற்றன. அவை வெளியில் தெரிந்தால் அவமானம் என்று அஞ்சப்பட்டது.ஆனால் இப்போது இதெல்லாம் சகஜமப்பா என்ற பார்வை அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரவர்க்கத்தின் மத்தியில் காணப்படுகிறது.அதனை சட்ட பூர்வமாக்குவதைத் தவிர மற்ற அனைத்தையும் அவர்கள் செய்து விட்டார்கள்.

இந்தியாவில் ஊழலை உச்ச மட்ட அளவுக்கு கொண்டு சென் றது உலகமய, தாராளமயக் கொள் கைகளே என்று குறிப்பிடும் முன் னாள் மத்திய கண்காணிப்பு ஆணையர் என் .விட்டல் பின்வரு மாறு கூறுகிறார்- தாராளமயக் கொள்கைகள் பிரம்மாண்டமான ஊழலுக்கு இட்டுச்சென்றுள்ளன. முந்தைய பர்மிட் -லைசென்ஸ் ஆட்சியமைப்பில் ஊழல் என்பது சில்லரை வணிகம் போல நடத்தப் பட்டது. ஏனெனில்அப்போது தனி நபர்கள் உரிமங்களை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். தாராளமயமாக்கல் கொள்கையின் அமலாக்கத்துக்குப்பிறகு பிரம் மாண்டமான ஊழல்கள் மூலம் தான் அரசியல்வாதிகளால் பணம் பண்ண முடிகிறது. அதற்கேற்ற வகையில் கொள்கைகளை வகுப் பதன் மூலமே அது சாத்தியமா யிற்று. தாராளமயமாக்கலுக்குப் பிறகு முதலாளித்துவ சந்தையே ஆதிக் கம் செலுத்தும் நிலை ஏற்பட்டது. எனவேதான் ஹர்ஷத் மேத்தா, கேதன் பரேக் போன்றவர்களின் ஊழலை நாடு எதிர்கொண்டது. நாடும் மக்களும் எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சனைகளுக்குக் காரணமான உலகமயக் கொள்கை களையும் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரக் கொள்கைளையும் முறியடித்து மக்கள்நலன்களை உயர்த்திப்பிடிக்கும் கொள்கை களுக்காகப் போராடுவதே நம் முன் உள்ள ஒரேவழியாகும்.

( ஆதாரம் : பிரன்ட்லைன் டிச.17 , 2010)

No comments:

Post a Comment