Tuesday, November 30, 2010

எல்ஐசி வலுவாக உள்ளது: குற்றமிழைத்த அதிகாரிகளை சிபிஐ கவனிக்கும் : டி.எஸ்.விஜயன்

எல்ஐசி வீட்டு வசதி நிறு வனம் உள்ளிட்ட நிதிநிறு வனங்களில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தனிப் பட்ட அதிகாரிகளே என் றும், அவர்களை மத்திய புலனாய்வுக்கழகம்(சிபிஐ) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது என்றும் ஆயுள் காப்பீட்டுக் கழகத் தின் (எல்ஐசி) தலைவர் டி.எஸ்.விஜயன் கூறினார்.

இந்த அதிகாரிகளின் முறைகேடுகளால் எல்ஐசி எனும் மாபெரும் நிறுவனத் திற்கு பாதிப்பு எதுவும் இல்லை என்றும், தனிப் பட்ட அதிகாரிகளின் இது போன்ற முறைகேடுகளை தடுக்க ஒழுங்குமுறை நட வடிக்கைகள் மேலும் உறு திப்படுத்தப்படும் என்றும் தில்லியில் செய்தியாளர் களிடம் பேசிய அவர் கூறி னார். ரூ.24 ஆயிரம் கோடி உபரி வருமானத்துடன் எல்ஐசி நிறுவனம் மேலும் வலுவான நிலையில் இருக் கிறது என்றும் அவர் குறிப் பிட்டார்.

ஊழல் அல்ல;

லஞ்ச முறைகேடு

இதனிடையே, மணி மேட்டர்ஸ் எனும் தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து பெருமளவில் லஞ்சம் பெற்றுக் கொண்டு மிகப்பெரும் தொகையை வீட்டுக்கடன் என்ற பெய ரில் வழங்கிய எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ், இந்தி யன் வங்கி, பஞ்சாப் நேஷ னல் வங்கி, சென்ட்ரல் வங்கி உள்ளிட்ட நிறுவனங்க ளின் உயர் அதிகாரிகளை கடந்த புதனன்று சிபிஐ கைது செய்தது. இந்த வழக்கை ஊழல் எனக் கூற முடியாது என்றும், பொதுத் துறை மற்றும் தனியார் நிறு வன அதிகாரிகள் ஈடுபட் டுள்ள லஞ்ச முறைகேடு என்ற அடிப்படையிலேயே விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் சிபிஐ இயக்குநர் பல்வீந்தர் சிங் கூறினார்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க வைரவிழா - 22வது மாநாடு ஏழைகளின் போராட்டத்திற்கு துணை நிற்போம்! காப்பீட்டு ஊழியர்களுக்கு மாணிக் சர்க்கார் அழைப்பு

ஆட்சியாளர்களின் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள் கைகளை எதிர்த்து நடக்கும் போராட்டத்தில் முறைசாராத் தொழிலாளர்களையும் ஈடுபடுத் திட, அணிதிரட்டப்பட்ட தொழி லாளர் வர்க்கத்தில் மிகவும் கூர் மையான வர்க்கப்பார்வையைக் கொண்டுள்ள இன்சூரன்ஸ் ஊழி யர் சங்கம் முக்கிய பாத்திரம் வகிக்க வேண்டும் என்று திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் அறைகூவல் விடுத்தார்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வைர விழா ஆண்டில் 22ஆவது பொது மாநாடு, சனிக்கிழமையன்று மாலை புது தில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றது. மாநாட்டைத் துவக்கி வைத்து திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் உரை யாற்றினார்.

அப்போது அவர் கூறிய தாவது:

நாட்டின் நலன்களைப் பாது காப்பதில் இன்சூரன்ஸ் துறை மிகுந்த முக்கியமான பாத்திரம் வகிக்கிறது. நாட்டின் வளர்ச்சிக் குப் பல வழிகளில் அது மிகவும் உதவியாக இருந்து வருகிறது.

நமது நாட்டில் இன்சூரன்ஸ் வணிகம் 1880களில் துவங்கியது. அவற்றில் பெரும்பாலான நிறு வனங்கள் கல்கத்தாவில்தான் தங்கள் வணிகத்தை ஆரம்பித் தன. அவை அனைத்தும் தனி யார் நிறுவனங்களாக இருந்த தால் அவை மக்களின் நலன்கள் குறித்தோ, மக்களுக்கு உதவ வேண்டும் என்றோ கவலைப்பட வில்லை. எனவே நாட்டில் ஜன நாயக எண்ணம் கொண்ட மக்கள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களையடுத்து இந் திய அரசு அவற்றை தேசியமய மாக்க முடிவு செய்தது. 1956இல் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டு, ஆயுள் இன் சூரன்ஸ் சங்கம் உருவானது. பின் னர் 1972இல் பொது இன்சூரன்ஸ் துறை அமைக்கப்பட்டது. அத னைத் தொடர்ந்து இன்சூரன்ஸ் துறையில் நான்கு பொதுத்துறை நிறுவனங்கள் அமைக்கப்பட் டன.

இன்சூரன்ஸ் துறை நாட்டின் வளர்ச்சியில், நாட்டின் அடிப் படை உள்கட்டமைப்பு வசதி களை மேம்படுத்துவதில் மிக வும் முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. 2008-09இல் மட்டும் இன்சூரன்ஸ் துறையானது நாட் டின் பல்வேறு பகுதிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்துவதற்காக அரசுக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக மாக வழங்கி இருக்கிறது.

ஆனாலும் இன்றைய பரிதாப நிலை என்ன? ஆட்சியாளர்கள் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றத் தொடங்கியபின், நாட்டின் பொதுத் துறை நிறுவனங்கள் மீது, நாட் டின் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கத் தொடங்கி இருக்கி றது. குறிப்பாக ஆயுள் இன்சூ ரன்ஸ் துறையை குறி வைத்துத் தாக்கிக் கொண்டிருக்கிறது. அதன் பங்குகளைத் தனியாருக் குத் தாரை வார்க்கத் துடித்துக் கொண்டிருக்கிறது.

மத்திய அரசின் மக்கள் விரோ தக் கொள்கைகள் காரணமாக சாமானிய மக்கள் கடும் துன் பத்திற்கு ஆளாகியுள்ளார்கள். சாமானிய மக்களின் பிரச்சனை களை மிகவும் ஆழமாக நாம் பரிசீலிக்காமல் போனால், இன் சூரன்ஸ் துறையில் உள்ள பிரச் சனைகளும் கடும் சோதனை களுக்குள்ளாகும் என்று அஞ்சு கிறேன். எனவே, சாமானிய மக் களுக்கு எதிராக மத்திய அரசு தொடுத்துள்ள தாக்குதலை எதிர்த்து முறியடிக்க இன்சூ ரன்ஸ் ஊழியர்களாகிய நீங்களும் முன்வர வேண்டும்.

அதிலும் முக்கியமாக விலை வாசி உயர்வு. நம்முடைய கோரிக்கை, விலைவாசி உயர்வு கட்டுப்படுத் தப்பட வேண்டும் என்பதாகும். ஆனால் அரசு அதனைச் செய்ய மறுக்கிறது. விலைவாசி உயர் வைக் கட்டுப்படுத்த நாம் பல ஆலோசனைகளை அரசுக்குச் சொல்லி இருக்கிறோம். நாட்டில் பொது விநியோக முறையை வலுப்படுத்தி, அனைவருக்கு மான பொது விநியோக முறையை அமல்படுத்துமாறு கோரினோம். நியாய விலைக்கடைகளின் மூல மாக அத்தியாவசியப் பொருட் களை மானிய விலையில் அளித் திட வேண்டும் என்று கோருகி றோம். ஆனால் அதனைச் செய்ய அரசு மறுக்கிறது. மாறாக கள்ளச் சந்தைக்காரர்களையும், ஊக வணிகர்களையும் கொழுக்கச் செய்யக்கூடிய விதத்தில் அரசு சாமானியமக்களைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்பட வில்லை. சரியாகச் சொல்வ தென்றால் செயற்கைப் பற்றாக் குறையை இத்தகைய பேர்வழி கள் உருவாக்கி விலைவாசியை உயர்த்திடும்போது, அதை அரசு கண்டுகொள்ளாமல் கண்ணை மூடிக் கொள்கிறது. நாடாளுமன் றத் தேர்தலில் தாங்கள் வெற்றி பெறுவதற்கு உதவிடும் கள்ளச் சந்தைக்காரர்களையும், ஊக வர்த்தகப் பேர்வழிகளையும் கொழுக்கச் செய்வதில் உள்ள அக்கறை, சாமானிய மக்களின் மீது இல்லை. மத்திய அரசின் இத்தகைய மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக, ஓர் ஒன்றுபட்ட போராட்டத்தை நடத் திடாவிட்டால், மத்திய அரசு தன் கொள்கைகளை மாற்றிக் கொள் ளாது.

மத்திய அரசு இவ்வாறு மக் கள் விரோதக் கொள்கைகளைத் தான் கடைப்பிடிப்பதோடு மட்டு மல்லாமல், மாநில அரசுகளையும் அவ்வாறே நடந்துகொள்ளுமாறு கட்டளையிடுகிறது. மத்திய அரசு நாட்டில் பெரும்பகுதியாக உள்ள இளைஞர்களுக்கு வேலையளித் திட எவ்விதமான திட்டத்தையும் அமல்படுத்தவில்லை. காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்ப அது தயாராக இல்லை. மேலும் புதிதாக பணியிடங்களை யும் அது உருவாக்கவில்லை. தான் செய்யாதது மட்டுமல்ல, மாநில அரசுகளையும் அவ்வாறு நடந்துகொள்ளுமாறு அது கட்ட ளையிடுகிறது. ஆனால் இடது சாரி அரசாங்கங்களான மேற்கு வங்கம், கேரளம் மற்றும் திரபுரா மாநில அரசுகள் அதற்குச் செவி சாய்க்கவில்லை. நாங்கள் அனைத்துப் பணியிடங்களையும் நிரப்பியுள்ளோம். புதிய பணி யிடங்களையும் ஏற்படுத்தி வரு கிறோம். இதன்மூலம் இளைஞர் களை நாட்டின் முன்னேற்றத் திற்கான திட்டப் பணிகளைச் செய்திட ஏற்பாடுகளைச் செய் துள்ளோம்.

நாட்டின் பிற பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் மக்கள் ஏகபோக முதலாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங் களால், குறிப்பாக தொலைக் காட்சிகளால், தவறான முறை யில் வழிநடத்தப்படுகின்றனர். இவ்வாறு தவறான வழியில் நடத்தப்படும் அவர்களை வென் றெடுத்திட வேண்டும். நாட்டில் பெரும்பான்மையினர் முறை சாராத் தொழிலாளர்கள்தான். அவர்களிடம் அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு, ஸ்தாபன ரீதியாகத் திரண்டுள்ள உங்களைப்போன்ற அமைப்புகளால்தான் முடியும்.

எனவே நாட்டிலேயே மிகச் சிறந்த முறையில் ஸ்தாபனரீதி யாகத் திரட்டப்பட்டு, தங்கள் துறையினை அரசின் அழிவுக் கொள்கைகளிலிருந்து பாது காத்து வந்துள்ள நீங்கள், நாட்டில் கடும் துன்பத்திற்கு ஆளாகி யுள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பிரச்சனை களையும், அணிதிரட்டப்படாத தொழிலாளர்களின் பிரச்சனை களையும் தீர்த்து வைக்க அவர் கள் போராடும்போது அவர்க ளுக்கு உற்ற துணையாக நிற்க வேண்டும்.

இவ்வாறு மாணிக் சர்க்கார் பேசினார்.

தோழர் கருப்பையா நினைவாக படிப்பகம்

காலமெல்லாம் உழைத்த ஒரு மனிதனை எப்படிப்
போற்றுவது?

தொண்டைமான் நல்லூர் கிராமத்தில் தோழர் கருப்பையா
( முன்னாள் துணைத்தலைவர், காப்பீட்டு கழக ஊழியர் சங்கம்,
தஞ்சைக் கோட்டம்) நினைவாக ஒரு நூலகம்
செயல்பட்டு வருகிறது. சி பி எம் மாவட்டச் செயலாளராகவும்
செயலாற்றியவர் கருப்பையா. புதுக்கோட்டை மண்ணில்
அறிவொளி இயக்கத்தில் தோழர் கண்ணம்மாவுடன் இணைந்து
அவர் ஆற்றிய பணி அற்புதமானது. குவாரி பெண் உழைப்பாளிகளின்
வாழ்வுரிமைக்கான போராட்டத்திற்கு தலைமை ஏற்று அவர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தவர்.

அவரின் சொந்த கிராமத்தில் இந் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
சிந்தனைக்கும், கல்விக்கும் மறு பெயர்தானே கருப்பையா.

Monday, November 29, 2010

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமாநாடு மாணிக் சர்க்கார் அழைப்பு

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க வைரவிழா - 22வது மாநாடு ஏழைகளின் போராட்டத்திற்கு துணை நிற்போம்! காப்பீட்டு ஊழியர்களுக்கு மாணிக் சர்க்கார் அழைப்பு
புதுதில்லி, நவ. 21-

ஆட்சியாளர்களின் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள் கைகளை எதிர்த்து நடக்கும் போராட்டத்தில் முறைசாராத் தொழிலாளர்களையும் ஈடுபடுத் திட, அணிதிரட்டப்பட்ட தொழி லாளர் வர்க்கத்தில் மிகவும் கூர் மையான வர்க்கப்பார்வையைக் கொண்டுள்ள இன்சூரன்ஸ் ஊழி யர் சங்கம் முக்கிய பாத்திரம் வகிக்க வேண்டும் என்று திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் அறைகூவல் விடுத்தார்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வைர விழா ஆண்டில் 22ஆவது பொது மாநாடு, சனிக்கிழமையன்று மாலை புது தில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றது. மாநாட்டைத் துவக்கி வைத்து திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் உரை யாற்றினார்.

அப்போது அவர் கூறிய தாவது:

நாட்டின் நலன்களைப் பாது காப்பதில் இன்சூரன்ஸ் துறை மிகுந்த முக்கியமான பாத்திரம் வகிக்கிறது. நாட்டின் வளர்ச்சிக் குப் பல வழிகளில் அது மிகவும் உதவியாக இருந்து வருகிறது.

நமது நாட்டில் இன்சூரன்ஸ் வணிகம் 1880களில் துவங்கியது. அவற்றில் பெரும்பாலான நிறு வனங்கள் கல்கத்தாவில்தான் தங்கள் வணிகத்தை ஆரம்பித் தன. அவை அனைத்தும் தனி யார் நிறுவனங்களாக இருந்த தால் அவை மக்களின் நலன்கள் குறித்தோ, மக்களுக்கு உதவ வேண்டும் என்றோ கவலைப்பட வில்லை. எனவே நாட்டில் ஜன நாயக எண்ணம் கொண்ட மக்கள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களையடுத்து இந் திய அரசு அவற்றை தேசியமய மாக்க முடிவு செய்தது. 1956இல் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டு, ஆயுள் இன் சூரன்ஸ் சங்கம் உருவானது. பின் னர் 1972இல் பொது இன்சூரன்ஸ் துறை அமைக்கப்பட்டது. அத னைத் தொடர்ந்து இன்சூரன்ஸ் துறையில் நான்கு பொதுத்துறை நிறுவனங்கள் அமைக்கப்பட் டன.

இன்சூரன்ஸ் துறை நாட்டின் வளர்ச்சியில், நாட்டின் அடிப் படை உள்கட்டமைப்பு வசதி களை மேம்படுத்துவதில் மிக வும் முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. 2008-09இல் மட்டும் இன்சூரன்ஸ் துறையானது நாட் டின் பல்வேறு பகுதிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்துவதற்காக அரசுக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக மாக வழங்கி இருக்கிறது.

ஆனாலும் இன்றைய பரிதாப நிலை என்ன? ஆட்சியாளர்கள் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றத் தொடங்கியபின், நாட்டின் பொதுத் துறை நிறுவனங்கள் மீது, நாட் டின் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கத் தொடங்கி இருக்கி றது. குறிப்பாக ஆயுள் இன்சூ ரன்ஸ் துறையை குறி வைத்துத் தாக்கிக் கொண்டிருக்கிறது. அதன் பங்குகளைத் தனியாருக் குத் தாரை வார்க்கத் துடித்துக் கொண்டிருக்கிறது.

மத்திய அரசின் மக்கள் விரோ தக் கொள்கைகள் காரணமாக சாமானிய மக்கள் கடும் துன் பத்திற்கு ஆளாகியுள்ளார்கள். சாமானிய மக்களின் பிரச்சனை களை மிகவும் ஆழமாக நாம் பரிசீலிக்காமல் போனால், இன் சூரன்ஸ் துறையில் உள்ள பிரச் சனைகளும் கடும் சோதனை களுக்குள்ளாகும் என்று அஞ்சு கிறேன். எனவே, சாமானிய மக் களுக்கு எதிராக மத்திய அரசு தொடுத்துள்ள தாக்குதலை எதிர்த்து முறியடிக்க இன்சூ ரன்ஸ் ஊழியர்களாகிய நீங்களும் முன்வர வேண்டும்.

அதிலும் முக்கியமாக விலை வாசி உயர்வு. நம்முடைய கோரிக்கை, விலைவாசி உயர்வு கட்டுப்படுத் தப்பட வேண்டும் என்பதாகும். ஆனால் அரசு அதனைச் செய்ய மறுக்கிறது. விலைவாசி உயர் வைக் கட்டுப்படுத்த நாம் பல ஆலோசனைகளை அரசுக்குச் சொல்லி இருக்கிறோம். நாட்டில் பொது விநியோக முறையை வலுப்படுத்தி, அனைவருக்கு மான பொது விநியோக முறையை அமல்படுத்துமாறு கோரினோம். நியாய விலைக்கடைகளின் மூல மாக அத்தியாவசியப் பொருட் களை மானிய விலையில் அளித் திட வேண்டும் என்று கோருகி றோம். ஆனால் அதனைச் செய்ய அரசு மறுக்கிறது. மாறாக கள்ளச் சந்தைக்காரர்களையும், ஊக வணிகர்களையும் கொழுக்கச் செய்யக்கூடிய விதத்தில் அரசு சாமானியமக்களைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்பட வில்லை. சரியாகச் சொல்வ தென்றால் செயற்கைப் பற்றாக் குறையை இத்தகைய பேர்வழி கள் உருவாக்கி விலைவாசியை உயர்த்திடும்போது, அதை அரசு கண்டுகொள்ளாமல் கண்ணை மூடிக் கொள்கிறது. நாடாளுமன் றத் தேர்தலில் தாங்கள் வெற்றி பெறுவதற்கு உதவிடும் கள்ளச் சந்தைக்காரர்களையும், ஊக வர்த்தகப் பேர்வழிகளையும் கொழுக்கச் செய்வதில் உள்ள அக்கறை, சாமானிய மக்களின் மீது இல்லை. மத்திய அரசின் இத்தகைய மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக, ஓர் ஒன்றுபட்ட போராட்டத்தை நடத் திடாவிட்டால், மத்திய அரசு தன் கொள்கைகளை மாற்றிக் கொள் ளாது.

மத்திய அரசு இவ்வாறு மக் கள் விரோதக் கொள்கைகளைத் தான் கடைப்பிடிப்பதோடு மட்டு மல்லாமல், மாநில அரசுகளையும் அவ்வாறே நடந்துகொள்ளுமாறு கட்டளையிடுகிறது. மத்திய அரசு நாட்டில் பெரும்பகுதியாக உள்ள இளைஞர்களுக்கு வேலையளித் திட எவ்விதமான திட்டத்தையும் அமல்படுத்தவில்லை. காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்ப அது தயாராக இல்லை. மேலும் புதிதாக பணியிடங்களை யும் அது உருவாக்கவில்லை. தான் செய்யாதது மட்டுமல்ல, மாநில அரசுகளையும் அவ்வாறு நடந்துகொள்ளுமாறு அது கட்ட ளையிடுகிறது. ஆனால் இடது சாரி அரசாங்கங்களான மேற்கு வங்கம், கேரளம் மற்றும் திரபுரா மாநில அரசுகள் அதற்குச் செவி சாய்க்கவில்லை. நாங்கள் அனைத்துப் பணியிடங்களையும் நிரப்பியுள்ளோம். புதிய பணி யிடங்களையும் ஏற்படுத்தி வரு கிறோம். இதன்மூலம் இளைஞர் களை நாட்டின் முன்னேற்றத் திற்கான திட்டப் பணிகளைச் செய்திட ஏற்பாடுகளைச் செய் துள்ளோம்.

நாட்டின் பிற பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் மக்கள் ஏகபோக முதலாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங் களால், குறிப்பாக தொலைக் காட்சிகளால், தவறான முறை யில் வழிநடத்தப்படுகின்றனர். இவ்வாறு தவறான வழியில் நடத்தப்படும் அவர்களை வென் றெடுத்திட வேண்டும். நாட்டில் பெரும்பான்மையினர் முறை சாராத் தொழிலாளர்கள்தான். அவர்களிடம் அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு, ஸ்தாபன ரீதியாகத் திரண்டுள்ள உங்களைப்போன்ற அமைப்புகளால்தான் முடியும்.

எனவே நாட்டிலேயே மிகச் சிறந்த முறையில் ஸ்தாபனரீதி யாகத் திரட்டப்பட்டு, தங்கள் துறையினை அரசின் அழிவுக் கொள்கைகளிலிருந்து பாது காத்து வந்துள்ள நீங்கள், நாட்டில் கடும் துன்பத்திற்கு ஆளாகி யுள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பிரச்சனை களையும், அணிதிரட்டப்படாத தொழிலாளர்களின் பிரச்சனை களையும் தீர்த்து வைக்க அவர் கள் போராடும்போது அவர்க ளுக்கு உற்ற துணையாக நிற்க வேண்டும்.

இவ்வாறு மாணிக் சர்க்கார் பேசினார்.

இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாநாட்டில் தபன்சென்

இன்சூரன்ஸ் பொதுத்துறை நிறுவனமாக இருந்ததே பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பியதற்குக் காரணம்: இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாநாட்டில் தபன்சென் பேச்சு
புதுதில்லி, நவ. 23-

உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவாக அமெரிக்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எல்லாம் திவாலாகிப்போன நிலையில் இந்தியாவில் இன்சூரன்ஸ் துறை பாதிக்கப்படாததற்கு அது பொதுத்துறையில் நீடித்ததே காரணம் என்று இந்திய தொழிற்சங்க மையத்தின் பொதுச்செயலாளர் தபன்சென் கூறினார்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வைர விழா ஆண்டில் 22ஆவது பொது மாநாடு, புதுதில்லியில் சனிக்கிழமையன்று துவங்கியது. முன்
னதாக, இன்சூரன்ஸ் ஊழியர் சங்க ஊழியர்கள் சங்கத்தின் செங்கொடி மற்றும் செம்பதாகைகளை ஏந்திய வண்ணம் புதுதில்லி, கன்னாட் பிளேஸ், ஜீவன் பாரதி கட்டிடத்தின் முன்பிருந்து மாபெரும் பேரணியாக, ‘பொதுத் துறையைப் பாதுகாப்போம்’, ‘பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களைப் பாதுகாப்போம்’, ‘நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை முறியடிப்போம்’ என்று முழக்கமிட்டவாறு, பொது மாநாடு நடைபெறும் ராம் லீலா மைதானத்திற்கு வந்தனர்.

மாநாட்டுப் பந்தலின் முன்பு சங்கத்தின் கொடியினை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தலைவர் அமானுல்லா கான் ஊழியர்கள் மற்றும் பிரதி
நிதிகளின் பலத்த முழக்கங்களுக்கிடையே ஏற்றி வைத்தார்.

மறைந்த தோழர்கள் ஜோதிபாசு, ஹர்கிசன்சிங் சுர்ஜித் உள்ளிட்ட தலைவர்களுக்கு மாநாட்டில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் எம்.கே. ரைனா வரவேற்புரை நிகழ்த்தினார். மாநாட்டை, திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் துவக்கி வைத்து உரையாற்றினார். சிஐடியு அகில இந்திய பொதுச் செயலாளர் தபன் சென் வாழ்த்திப் பேசியதாவது:

உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதையடுத்து அமெ ரிக்காவில் இருந்த அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங் களும் திவாலாகிப் போயின. அமெ ரிக்க அரசாங்கம் அவற்றைக் காப்பாற்ற பல மில்லியன் டாலர்கள் அளித்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் இன்சூரன்ஸ் துறை உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவால் சிறிதும் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் அவை பொதுத்துறையாக நீடிப்பதேயாகும். அவ்வாறு பொதுத்துறையாக நீடிப்பதற்கு இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் நடத்திய போராட்டங்களின் வெற்றியே காரணமாகும்.அதுமட்டுமல்ல, இன்சூரன்ஸ் துறையானது, பல லட்சம் கோடி ரூபாய்களை நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அரசுக்
குக் கொடுத்து உதவி வருகிறது. ஆனாலும்கூட இன்றும் இந்திய அரசு, இன்சூரன்ஸ் துறையைத் தனியாருக்குத் தாரைவார்க்கத் துடித்துக் கொண்டிருக்கிறது. இதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று தபன்சென் கூறினார்.

ஆர். முத்துசுந்தரம்

அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனப் பொதுச் செயலாளர் ஆர்.முத்துசுந்தரம் தன் வாழ்த்துரையில், பொதுத்துறை நிறுவனங்களான ஆயுள் இன்சூரன்ஸ் மற்றும் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நன்கு செயல்பட்டு வந்தபோதிலும், தமிழ்நாடு அரசு, மாநில அரசு ஊழியர்களுக்கான மருத்துவ இன்சூரன்சை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறது. இதற்கு எதிராக மாநில அரசு ஊழியர்கள் போராடி வருவதைச் சுட்டிக்காட்டினார்.

பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கன்வீனர் வி.ஏ.என். நம்பூதிரி, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் பிரதிப் பிஸ்வாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

பொது மாநாட்டில் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் என்.எம்.சுந்தரம், ஆர். கோவிந்தராஜ், டேவிட், எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

ஞாயிறன்று காலை பிரதிநிதிகள் மாநாடு புதுதில்லி, ஸ்ரீ ஃபோர்ட் அரங்கத்தில் துவங்கியது. மாநாட்டில் நாடு முழுதுமிருந்து 1200 பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சுவாமிநாதன், கோட்டங்களின் காப்பீட்டு ஊழியர் சங்கங்களைச் சேர்ந்த முத்துக்குமாரசாமி , சுரேஷ்குமார் , ஆர். புண்ணியமூர்த்தி, வீ. சுரேஷ் , ஆர். தர்மலிங்கம் , எஸ். ராமன் , எஸ். ரமேஷ்குமார், மனோகரன் ஆகியோர் தலைமையில் 55 பிரதிநிதிகளும் 80 பார்வையாளர்களும் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மாநாடு புதன்கிழமை வரை நடைபெறுகிறது

AIIEA வைர விழா ஆண்டு மாநாடு

புது டெல்லியில் நவம்பர் 20 முதல் 24 வரை நடைபெற்ற
AIIEA வின் வைர விழா ஆண்டு 22 வது மாநாடு எழுச்சியாக
அமைந்திருந்தது.

மாநாட்டில் பேசிய பிரதிநிதிகள் இம்மாநாட்டை வெற்றி மாநாடு
( CONFERENCE OF VICTORY ) என்று வர்ணித்தனர். ஊதிய உயர்வுக்
கோரிக்கையில் எட்டப்பட்ட மாபெரும் வெற்றியின் பின்னணியில்
அவ் வர்ணனை பொருத்தமானது.

இன்னும் சிலர் நம்பிக்கை மாநாடு
( CONFERENCE OF CONFIDENCE ) என்றார்கள். 16 ஆண்டுகளாக
உலகமயக் கொள்கைகளை எதிர்த்துப் போராடி எல் ஐ சி யின்
பொதுத்துறைத் தன்மையை பாதுகாத்திருப்பதாலும், தனியார்
போட்டிக்கு எதிராக 73 % சந்தைப் பங்கை எல் ஐ சி தக்க
வைத்திருப்பதாலும் அப்படி அழைத்ததும் பொருத்தமானதே.

வேறு சிலர் HISTORIC CONFERENCE என்றார்கள். 60 ஆண்டுகள்
ஆனதால் மட்டுமல்ல. தேசிய மயமாக்குகிற கோரிக்கையை
1951 ல் பிறந்தவுடன் வைத்தது , 1956 ல் 245 கம்பெனிகளை
இணைத்து எல் ஐ சி யை உருவாக்கியவுடன் ஊழியர்களின்
ஊதிய-பணி நிலைமைகளை சீராக்க எடுத்த முயற்சிகள், 1960
களில் பொறிமயமாக்கல் எதிர்ப்புப் போராட்டம், 1970 களில்
பகுதிக் கதவடைப்பை எதிர்கொண்டது, 1980 களில் காலவரையற்ற
வேலை நிறுத்தம் மற்றும் எல் ஐ சி யை ஐந்து கூறுகளாக்குகிற
மசோதாவை எதிர்த்தது, 1990 களில் தனியார் மய எதிர்ப்பு என
வரலாறு முழுவதிலும் இடையறாது போராடி வந்துள்ள சங்கத்தின்
மாநாடை வரலாறு படைக்கும் மாநாடு என்று அழைக்காமல் வேறு
எப்படி அழைக்க முடியும்!