Thursday, December 23, 2010

ஒரு தீர்க்கதரிசி !

ஆத்தா
ஆடு வளர்த்தா
மாடு வளர்த்தா
கோழி வளர்த்தா
நாய் மட்டும் வளர்க்கலே
ஆத்தா ஒரு
தீர்க்க தரிசி !
அடை மழை வெள்ளமென்றால்
அரசு
ஆட்டுக்கும்
மாட்டுக்கும்
தேர்தல் நேரமென்றால்
கோழிக்குக்கூட
நிவாரணம் கொடுக்கும்
நாய்க்கு யார்
கொடுப்பார்கள்?
அது தெரிந்துதான்
ஆத்தா
நாய் வளர்க்கலே
ஆத்தா - ஒரு
தீர்க்கரிசி

-கபிஸ்தலம் எஸ். இராஜேந்திரன்
மயிலாடுதுறை கிளை

No comments:

Post a Comment