Thursday, December 23, 2010

டிசம்பர் 25 அழைக்கிறது

முதலாளிகளின் பேச்சையே
நமது மூச்சாக நம்பியவர்கள்
மதியோரின் பசிபோக்க
மாடாய் உழைத்தவர்கள்
கொத்தடிமை குகைக்குள்
கொடுமைகளை அனுபவித்தவர்கள்
உழைப்பால் காலத்தை கழித்த
உத்தம ராஜாக்கள்
விதியை நம்பிவாழ்ந்தவர்கள்
சதியால் வீழ்த்தபட்டவர்கள்
அரிவாள் சுத்தியுடன்
செங்கொடி பிடித்தவர்கள்
கூலிக்காக குரல் கொடுத்த
தினக்கூலி போராளிகள்
தீயுக்கு இரையான
தென்கிழக்கு சிங்கங்கள்
வெண்மணியின் இருளைபோக்கி
வெளிச்சத்தைதந்த கதிரவர்கள்
நீங்காது நினைவில் வாழும்
நிர்ணயிக்கமுடியாத பொக்கிrங்கள்
டிசம்பர் இருபத்தைந்தாம் நாளை
வெண்மணிக்கு முகவரியாக்கி தந்தவர்கள்
தீயில் வெந்திறந்தாலும்
திரும்பிபார்க்க வைத்தவர்கள்
அப்படிப்பட்ட அஞ்சாநெஞ்சங்களுக்கு
அஞ்சலிசெலுத்திட அனைவரும்
அலைகடலெனெ திரண்டுவாருங்கள்
அன்பான வேண்டுகோளையேற்று
சங்கமிப்போம் முக்கடலாய்
சரித்திரம் படைப்போம் ஒன்றுபட்ட மக்களாய்

-ஆ. பழனிச்சாமி,
தின ஊழியர்
எல்.ஐ.சி. கோட்ட அலுவலகம்,
தஞ்சாவூர்.

No comments:

Post a Comment